Posts

Showing posts from 2013

தீ நகரில் உள்ள சரவணா ஸ்டோர்ஸ் தெரு சிறந்ததா ? ரிச் ஸ்ட்ரீட் சிறந்ததா ?

தீ நகரில் உள்ள சரவணா ஸ்டோர்ஸ் தெரு சிறந்ததா ? ரிச் ஸ்ட்ரீட் சிறந்ததா ?  என்னை கேட்டால் வெளிநாடுகளில் இருந்து மின் சாதன பொருட்கள் மற்றும் உபகரணங்களை கொண்டு வந்து விற்று கொள்ளை லாபம் அடித்து தன் குடும்பம் மட்டும் வாழ என்னும் அந்த தெருவை காட்டிலும் , கோடி கோடியாக வருவாய் ஈட்டும் தீ நகர் தெருவானாலும் அந்த தெருவை நம்பி ஊரில் இருந்து கிளம்பி வந்த பல ஆண் பெண் குடும்பங்கள் வருவாயுடன் பிழைக்கிறது அதை ஒரு புறம் மனம் ஏற்று கொள்கிறது, அதற்காக தீ நகர் தெருக்கள் நியாயமாகிவிட முடியாது ,, மனிதன் தோன்றிய காலம் முதல் அவன் செய்கிற பிரதான செயல் உழைப்பு, ஒருவர் செய்கிற செயலுக்கும் உழைப்பிருக்கும் பெரும் வித்தியாசங்கள் உண்டு, மனிதன் செய்கின்ற செயலனைத்தும் உழைப்பாக கருதப்படமாட்டாது மாறாக ஒரு செயலை செய்வதன் மூலம் ஒன்றை அவனால் உற்பத்தி செய்ய முடிகிறது என்ற போதுதான் அவை உழைப்பாக கருதப்படுகிறது. அந்த உழைப்பு அவனுக் கு ஊதியம் தருகிறது.அந்த ஊதியம் அவன் வாழ்க்கை தரத்தை உயர்த்துகிறது.தரத்தை உயர்த்துவதோடு தொடர்ந்து உழைப்பதற்கு வழிவகை செய்கிறது. அடிப்படையில் சில கேள்விகள் என் ஆழ் மனதில் உள்ளது இன்றைய காலக்கட்டத்த...

INDIAN SOCIETY OF INTERNATIONAL LAW (ISIL)

INDIAN SOCIETY OF INTERNATIONAL LAW (ISIL) ஒரு சட்டம் ஏன் தேவைப்படுகிறது ?  எதோ ஒன்றை கட்டுப்படுத்தி வைப்பதற்கு தான் சட்டம் தேவைப்படுகிறது . அச்சட்டமானது எதை கட்டுப்படுத்தவேண்டும் ?  ஏன் கட்டுப்படுத்தவேண்டும் ? யாரை கட்டுப்படுத்தவேண்டும் ?  யாரால் கட்டுப்படுத்தவேண்டும் ? எப்பொழுது கட்டுப்படுத்தப்பட வேண்டும் ? இவை அனைத்தும் ஒவ்வொரு சட்டத்திலும் பொருத்தி பார்தோமென்றால் அடிப்படை தேடலாக இருக்கும் . நம்மை நாம் நெறி படுத்திக்கொள்ள சட்டங்கள் உதவும் என்ற வகையில் சட்டங்கள் உருவாக்கப்பட்டது , அதேபோன்று சட்டங்களில் உள்ள அரசியலும் ,சட்டங்களை வைத்து செய்யப்படும் அரசியல்,சட்டதிருத்தங்களால் செய்யப்படும் அரசியல் இவ்வாறான வினோத அரசியல் கட்டமைப்புகளை கொண்டதாகவே நம் உலக அளவில் விதிக்கப்பட்ட சட்டங்களை அணுகலாம். அச்சட்டங்கள் யாருக்கான சட்டங்கள் என்பதையும்,அச்சட்டங்கள் எந்த எந்த துறைகளில் எவ்வகையான அழுத்தங்களை விளைவுகளை மாற்றங்களை தருகிறது என்பதை சட்டங்களினால் ஆராய வேண்டிஉள்ளது. இந்திய ஊடக அரசியல் எழுதப்படாத அரசியல் என்பது நாம் அறிந்ததே ,இந்திய ஊடகத்தின் உரிமைகள் , அதன் காட்சி சித்தரிப்புகள் ...

தென் இந்தியாவில் ஊரக மேம்பாடும் தகவல் தொடர்பியல் தொழில்நுட்பங்களும்

தென் இந்தியாவில் ஊரக மேம்பாடும் தகவல் தொடர்பியல் தொழில்நுட்பங்களும்  இன்று கிராமபுறங்கள் முற்றிலும் வளர்ச்சி அடைந்து கொண்டுவருகிறது எனவும், நகரங்களோ அயல் நாடுகள் போன்று அடுத்த கட்ட முன்னேற்ற பாதையை எட்டிக்கொண்டு இருக்கின்றது என்பது போன்ற நவீன பிம்பத்தை நம் கண்கள் கண்டு அதை மனதளவில் எற்று கொண்டு வருகிறோம். இங்கு நாம் தெளிவு கொள்ள வேண்டியது, நகரங்களுக்கான சமமுன்னேற்றம் கிராமங்களில் இல்லை என்பதால் கிராமங்களை வளர்ச்சி அடைய செய்ய விழைகிறோம், இதற்கு அரசும், பல அரசு சார் இயக்கங்களும், தனியார் நிறுவனகளும், குழுக்களும் செயல்பட்டு கொண்டு வருகிறது இங்கு வளர்ச்சி எது என்பதை நாம் இவ்விடத்தில் அறிய வேண்டியுள்ளது. ஒரு அரசோ, குழுவோ, இயக்கமோ, அல்லது அந்த பகுதியில் வாழ்கின்ற ஒரு சிலரின் கருத்துக்களோ ஒரு பகுதியில் உள்ள ஒரு ஒட்டுமொத்த கிராமத்தின் வளர்ச்சி ஆகிவிடுமா.? ஊரக வளர்ச்சிக்காக நவீன கழிப்பிடம் அமைத்து தருகிறோம், தகவல் மையங்கள , இணைய மையங்கள், சுய உதவி குழுக்கள் போன்ற பல வசதிகளை கிராம புறங்களில் வாழும் மக்களும் கற்று பயன் பெறவேண்டுமென்ற நல்ல நோக்கத்தில் அவைகளை இயக்குகிறோம் ஆனால் இவை அனைத்தும் ச...