INDIAN SOCIETY OF INTERNATIONAL LAW (ISIL)

INDIAN SOCIETY OF INTERNATIONAL LAW (ISIL)

ஒரு சட்டம் ஏன் தேவைப்படுகிறது ? 
எதோ ஒன்றை கட்டுப்படுத்தி வைப்பதற்கு தான் சட்டம் தேவைப்படுகிறது .
அச்சட்டமானது எதை கட்டுப்படுத்தவேண்டும் ? 
ஏன் கட்டுப்படுத்தவேண்டும் ?
யாரை கட்டுப்படுத்தவேண்டும் ? 
யாரால் கட்டுப்படுத்தவேண்டும் ?
எப்பொழுது கட்டுப்படுத்தப்பட வேண்டும் ?
இவை அனைத்தும் ஒவ்வொரு சட்டத்திலும் பொருத்தி பார்தோமென்றால் அடிப்படை தேடலாக இருக்கும் .
நம்மை நாம் நெறி படுத்திக்கொள்ள சட்டங்கள் உதவும் என்ற வகையில் சட்டங்கள் உருவாக்கப்பட்டது , அதேபோன்று சட்டங்களில் உள்ள அரசியலும் ,சட்டங்களை வைத்து செய்யப்படும் அரசியல்,சட்டதிருத்தங்களால் செய்யப்படும் அரசியல் இவ்வாறான வினோத அரசியல் கட்டமைப்புகளை கொண்டதாகவே நம் உலக அளவில் விதிக்கப்பட்ட சட்டங்களை அணுகலாம்.
அச்சட்டங்கள் யாருக்கான சட்டங்கள் என்பதையும்,அச்சட்டங்கள் எந்த எந்த துறைகளில் எவ்வகையான அழுத்தங்களை விளைவுகளை மாற்றங்களை தருகிறது என்பதை சட்டங்களினால் ஆராய வேண்டிஉள்ளது.

இந்திய ஊடக அரசியல் எழுதப்படாத அரசியல் என்பது நாம் அறிந்ததே ,இந்திய ஊடகத்தின் உரிமைகள் , அதன் காட்சி சித்தரிப்புகள் , அவைகள் இயங்கும் தளம் ,அவை ஏற்ப்படுத்த கூடிய விளைவு , அவை பயன் படுத்திக்கொள்ளப்படும் மாற்றங்கள் இப்படி ஊடகத்தின் முழு பங்கினையும் நாம் புரிந்துக்கொள்வது நம் கடமை .அரசியல் அரசியல் என்று ஊடகத்தை அரசியலோடு ஒப்பிடுவதும் ஒருவகையில் ஏற்புடையதாகவே இருக்கும்,அரசியலுக்கும் ஊடகத்திக்கும் வெகுதூரமில்லை , அரசியலில் ஊடகம் ஓர் அங்கம் ஊடகத்தில் அரசியல் ஓர் அங்கம். அடிப்படை அரசியலையும் ஊடகத்தையும் நான் படித்த சிறு கதையோடு பகிர்கிறேன் 
சின்னப் பையன் அப்பாவிடம் கேட்டான்.'' அப்பா...அரசியல் என்றால் என்ன...?''
அப்பா யோசித்துவிட்டுச் சொன்னார்.
''நல்லது. உனக்கு நான் அதனை இப்படி விளங்கப்படுத்துகிறேன். நமது இந்தக் குடும்பத்தில் அதிகாரமுள்ளவன் நான். ஆகவே நான் அரசாங்கம். எனக்கு ஆலோசனை சொல்பவள் அம்மா. ஆகவே அவள் அமைச்சர். வேலைக்காரி நமது தயவில் வாழ்கிறாள். எனவே அவள் மக்கள். நீ அடிக்கடி கேள்வி கேட்பவன். ஆகவே நீ ஊடகம். உனது சின்னத் தம்பிப் பாப்பாதான் நாட்டின் எதிர்காலம்.''பையனுக்குக் கொஞ்சம் புரிந்தது, மீதி புரியவில்லை. யோசித்துக் கொண்டே அவன் படுக்கைக்குப் போய் விட்டான். நாடு இரவில் தம்பி அழுதான்,அம்மா கண்டுக்கொள்ளவில்லை , விழித்த சிறுவன் அம்மாவின் அறைக்குள் நுழைந்தான் அம்மா ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தாள். வேலைக்காரியின் அறைக்குள் போகுமுன், சாவித் துவாரத்தால் பார்த்தான். அங்கே வேலைக்காரியை அப்பா அடித்து துன்புறுத்தி கொண்டிருந்தார்.பையன் பேசாமல் வந்து படுத்துக் கொண்டான். காலையில் எழுந்ததும் அப்பாவிடம் சொன்னான்.''அப்பா..அரசியல் என்பதன் அர்த்தம் எனக்கு நன்றாகவே புரிந்து விட்டது...!''சரி, சொல் பார்க்கலாம்..'' என்றார் அப்பா.
மகன் சொன்னான்:
''அரசாங்கத்தால் மக்கள் கொடுமைக்குள்ளாகும் போது அமைச்சர்கள் குறட்டை விட்டுத் தூங்குவார்கள். ஊடகங்கள் எதுவும் பேசாமல் மௌனமாகிவிடும். நாட்டின் எதிர்காலத்தைப் பற்றிச் சிந்திக்க யாருமே இருக்க மாட்டார்கள்!'' 
இவ்வாறு இன்றைய காலக்கட்டத்தில் ஊடகத்தில் பங்கு உண்மையில் எந்த அளவிற்கு இருகின்றது என்பதை அறியாமலே அவை மறைக்கப்பட்டு இருப்பினும் அதை தான் நாம் பிரமாதமாக பேசி திரிகிறோம் . ஊடகத்திற்கும் ஊடக சட்டங்களுக்கும் உள்ள ஒற்றுமைகள் முரண்பாடுகள் போன்றவைகளையும் நாம் ஆராய வேண்டி உள்ளது , ஒரு ஊடகம் வெளியிடும் செய்தியை எதன் அடிப்படையில் உண்மை என்று கருதுவது போன்ற அடிப்படைக்கு நாம் விடை தேட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். உலகில் எந்த சட்டமும் எந்த ஒரு குற்றத்திற்கும் தீர்வாகிவிட முடியாது . ஒவ்வொரு குற்றத்திற்கும் ஒவ்வொரு காரணிகள் இருக்கலாம், ஒவ்வொரு ஊடகமும் ஒவ்வொரு விதத்தில் அணுகலாம்,ஆகா உண்மை செய்தி என்று ஒன்று இருக்கவும் முடியாது எந்த ஒரு ஊடகம் வெளியுடுவதும் உண்மையாக மட்டுமே இருந்து விடவும் முடியாது,வேண்டுமென்றால் குற்றத்திற்கான அடிப்படை கருவை தேடலாம்,மற்றொரு குற்றம் நடைபெறாது முழங்கலாம்,ஒரு ஊடகத்தால் அதை தான் சாத்தியமாக்க இயலும், குறிப்பாக இன்றைய ஊடகங்களால் .... நம் சட்டங்கள் ஊடகங்களுக்கு என்றும் சவாலாகவே இருக்கும் ,!சட்டம் அப்துல் நாசர் மதனியை எப்படி சித்தரித்ததோ,வீரப்பனை எப்படி சித்தரித்ததோ,நிதியானந்தாவை எப்படி சித்தரித்ததோ ,கூடங்குள மக்களை எப்படி சித்தரித்ததோ, குஜராத் நிகழ்வை எப்படி சித்தரித்ததோ,காஷ்மீரையும்,மும்பையும்,டெல்லியையும்,இலங்கையையும்,இன்னும் பலவற்றை எப்படிஎல்லாம் நம் சட்டம் சித்தரித்ததோ அதனோடு நம் ஊடகமும் இணைந்தே உள்ளது என்றும் 

Comments

Popular posts from this blog

வேலை வாய்ப்பு பயிற்சி அறிக்கை {INTERNSHIP REPORT}-இளந்தளிர் சமுதாய வானொலி 20-DEC-2011-20-JAN-2012

சென்னையில் இப்படி ஒரு மியூசியம் இருப்பது தெரியுமா? #InternationalMuseumDay

3,000 ஆண்டு பழமையான 30 அடி உயர சிலை! எகிப்தை ஆச்சர்யப்படுத்திய அதிசயம்